Friday, 12 June 2009


இலங்கை அரசபடைகளின் அறிக்கைப்படியும்இ விடுதலைப்புலிகளின் வெளிநாட்டுப் பணியகம் விடுத்த அறிக்கைப் படியும்
இறந்து போன பிரபாகரனை இன்னமும் வாழ வைப்பதன் மூலம் மேலும் சட்டச்சிக்கல்களை உருவாக்கி வவுனியாவில் முட்கம்பிகளிற்கு பின்னால் நாளை என்ன நடக்குமென்றே தெரியாமல் எதிர் காலத்தை தொலைத்துவிட்டு நிற்கும் மூன்று இலட்சம் மக்களினது வாழ்வு மட்டுமல்ல இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பத்தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள்..தனியாக சிறப்பு முகாம்களில் அடைக்கபட்டுள்ள 2300ற்கும் மேலான புலிகளின் இரண்டாம் மூன்றாம் கட்டத்தலைவர்கள் அரசியல் அமைப்பாளர்கள்.அவர்களது குடும்பங்கள் என்று நீளும் பட்டியலில் உள்ளவர்களின் எதிகாலம் என்ன???சிந்திப்போமா?

சாணக்கியமான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய பணி புலம்பெயர்ந்த இடங்களில் சொகுசு வாழ்க்கை வாழும் எங்களுடையது அல்லவா? முடகம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டு முழித்துக் கொண்டிருக்கும் உறவுகளை வைத்து வியாபாரம் செய்ய முற்படும் வியாபாரிகளை இனங் கண்டு விலகிக் கொள்வோம். வியாபரிகள் பெருகியதால்தான் நம் தலைவன் வீழ்ச்சி கண்டான். எங்கள் ராஜகோபுரம் அது அழிவற்றது. உலகுள்ள வரை அவருக்கு உண்டு வயது. கார்த்திகைப் பூக்களே உங்கள் கனவுகள் மெய்ப்படும். காலம் இது . முப்டை கொண்டு தமிழீழம் ஆண்ட எங்கள் ராஜகோபுரம் பாட்டிநிற்கும் இராஜதந்திரப் பொரினில் உலகை வெல்வோம்... நம்புங்கள் தமிழீழம் நாளை மலரும் என உறுதிகொள்வோம் ... எம் தேசியத் தலைவா உனக்கு எம் சிரம் தாழ்த்திய வீரவணக்கங்கள் உரித்தாகட்டும்.

No comments:

      முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்லர்..!             முகுந்தமுரளி உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1....